ஸ்பெயின் அணி வீரரான பெர்னான்டோ டொரஸ் லிவர்புல் அணியில் நிலைத்திருப்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் ரோய் ஹொட்ஜ்ஸன் தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் தாறுமாறான தோல்விகளையடுத்து லிவர்புல் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஹொட்ஜ்ஸன் நியமிக்கப் பட்டிருந்தார். இவர் ஜோ கோலை அணிக்காக ஒப்பந்தம் செய்தமையானது அணி ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மற்றொரு வீரரான டொரஸின் நிலைமை சந்தேகமாகவே உள்ளது.
டொரஸ் அத்லெடிக்கோ மட்ரிடிலிருந்து விலகி இவ் அணியில் இணைந்த ஓரிரு சீசன்களுக்கு சிறப்பாக செயற்பட்டிருந்தாலும், பின்னர் அவரால் அவ்வளவு பெரிதாக விளையாட முடியவில்லை. நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டிகளிலும் சோபிக்காததால் ரசிகர்களின் அதிருப்திக்கு உள்ளானார். சென்ற வருடத்தோடு அவரது ஒப்பந்தம் முடிந்திருந்தது. இந் நிலையில் “டொரஸ் தொடர்ந்தும் இங்கேயே விளையாடவே நான் விரும்புகிறேன். அவர் இருந்தால் அணியை இன்னும் வலுப்படுத்தலாம்” என ஹொட்ஜ்ஸன் கூறியுள்ளார்.