ஸ்பெயின் அணி வீரரான பெர்னான்டோ டொரஸ் லிவர்புல் அணியில் நிலைத்திருப்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் ரோய் ஹொட்ஜ்ஸன் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் தாறுமாறான தோல்விகளையடுத்து லிவர்புல் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஹொட்ஜ்ஸன் நியமிக்கப் பட்டிருந்தார். இவர் ஜோ கோலை அணிக்காக ஒப்பந்தம் செய்தமையானது அணி ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மற்றொரு வீரரான டொரஸின் நிலைமை சந்தேகமாகவே உள்ளது.
டொரஸ் அத்லெடிக்கோ மட்ரிடிலிருந்து விலகி இவ் அணியில் இணைந்த ஓரிரு சீசன்களுக்கு சிறப்பாக செயற்பட்டிருந்தாலும், பின்னர் அவரால் அவ்வளவு பெரிதாக விளையாட முடியவில்லை. நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டிகளிலும் சோபிக்காததால் ரசிகர்களின் அதிருப்திக்கு உள்ளானார். சென்ற வருடத்தோடு அவரது ஒப்பந்தம் முடிந்திருந்தது. இந் நிலையில் “டொரஸ் தொடர்ந்தும் இங்கேயே விளையாடவே நான் விரும்புகிறேன். அவர் இருந்தால் அணியை இன்னும் வலுப்படுத்தலாம்” என ஹொட்ஜ்ஸன் கூறியுள்ளார்.











பெக்கம் இல்லாத இங்கிலாந்து அணியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவரின் தலையிலேயே கட்டப்பட்டிருந்தது. லாம்பார்ட், ஜெரார்ட், பேர்டினான்ட் போன்ற சிறந்த வீரர்கள் இங்கிலாந்து அணியில் இருந்தும் அவர்களது திறமைகளை ஒருங்கிணைக்க முடியாது போனதால் அவ்வணி வெளியேறியது. இவர் ஜெர்மனியுடனான போட்டியில் கோல் போடாதது குறித்து ரசிகர்கள் கூச்சல் எழுப்பியபோது, இவர் கமராவைப் பார்த்து ரசிகர்களைத் திட்டியதால் ரசிகர்களிடையே மதிப்பும் இழந்து நிற்கிறார். இவரும் இப் போட்டித் தொடரில் ஒரு கோலையும் போடவில்லை.
ஸ்பெயின் இம்முறை உலகக்கிண்ணத்தை கைப்பற்றியிருந்தாலும் அதில் இவரது பங்களிப்பு மிகக் குறைவு என்பதே உண்மையாகும். 2008 ஸ்பெயின் அணி ஐரோப்பிய கிண்ணத்தை வெல்லக் காரணமாக அமைந்த பின்பு இவரிடத்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்தகுத் தக்கவாறு இவரும் லீக் சீசனில் சிறப்பாகவே ஆடி வந்தார். எனினும் உலகக் கோப்பைக்கு வந்த பின்பு எல்லாம் சொதப்பத் தொடங்கியது. கோலடிக்க அதிக வாய்ப்புக்கள் கிடைத்த போது அவற்றை வீணடித்தார். சக முன்கள வீரரான டேவிட் வில்லா 3..4.. என கோலடித்துக் கொண்டு போகவே இவர் மீதான நம்பிக்கையும் குறைந்து கொண்டே போனது. இறுதியில் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் மாற்று வீரராக களமிறங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப் பட்டார்.
ரொனால்டோ, ரொனால்டீனா வரிசையில் இம்முறை உலகக் கோப்பையில் பிறேசிலின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டவர்தான் பிறேசில் மத்தியகள வீரர் ககா. சென்றமுறை உலகக் கோப்பையில் ரொனால்டீனோவே தடுமாறியபோது சிறப்பாக செயல்பட்டு முன்னிலை வீரராக வலம் வந்தார். லீக் சீசனிலும், தகுதிநிலை ஆட்டங்களின் போதும் தானிருக்கும் அணியின் வெற்றிக்கு உதவியதால் இவர் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. எனினும் தவறாக பாஸ் செய்து கொண்டிருந்தமை, முரட்டுத் தனமான ஆட்டத்தில் ஈடுபட்டமை என்பவற்றால் ரசிகர்களுக்கு இவர் மேலிருந்த ஆர்வம் குறையத் தொடங்கி, பிறேசில் வெளியேறியதும் இல்லாமல் போனது.




























