Saturday, August 28, 2010

வுல்வ்ஸ்பேர்க் மீண்டும் தோல்வி !!

2008 பன்டஸ்லீகாவின் சாம்பியன் வி.எஃப்.எல் வுல்வ்ஸ்பேர்க் அணி இம்முறை தடுமாறி வருகிறது. முதல்போட்டியில் பேயர்னிடம் தோற்ற இவ்வணி நேற்று நடைபெற்ற போட்டியில் மெயின்ஸ் அணியிடம் 4-3 என்ற கோலடிப்படையில் பரிதாபமாகத் தோற்றது. அவ்வணியின் ட்ஸெகோ 24ம், 27ம் நிமிடங்களில் இரட்டைக் கோலடித்ததோடு, டியேகோ 30வது நிமிடத்தில் கோலடிக்க சடுதியாக 3-0 என அபார முன்னிலை பெற்றது. ஆனால் அதன்பின் ஆட்டம் மெயின்ஸ் கைவசமானது. முதற்பாதியின் போது மெயின்ஸின் டுங்கன் 40வது நிமிடத்தில் கோலடித்தார்.

அதன்பின் எல்கின் சோட்டோ 48வது நிமிடத்திலும், ஆன்ட்ரே சூர்லே 58வது நிமிடத்திலும் கோலடிக்க கோல் எண்ணிக்கை சமநிலைக்கு வந்தது. கடைசி நேரத்தில் போட்டியை தங்கள் பக்கம் ஈர்க்க வுல்வ்ஸ்பேர்க் அணியினர் கடுமையாக போராடிக் கொண்டிருந்தனர். எனினும் போட்டி முடிய 3 நிமிடங்கள் மட்டுமே இருக்கையில் மெயின்ஸின் அடம் ஸலாய் அற்புதமாக கோல் போட்டு அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

நேற்று நடந்த ஏனைய போட்டிகள்-

வெர்டர் பிரமன் 4 - 2 கொல்ன்
ஹன்னோவர் 2 - 1 ஷால்கே
ஹாம்பர்க் 3 - 1 ப்ராங்பர்ட்
ப்ரெய்பேர்க் 2 - 1 நியர்ன்பேர்க்
ஹொவன்ஹெய்ம் 1 - 0 சென்ட் பாலி

No comments:

Post a Comment