Saturday, August 21, 2010

செல்சீ மீண்டும் அபார வெற்றி !!!

இங்கிலிஷ் பிரீமியர் லீக் நடப்பு சாம்பியன் செல்சீ வீகான் அத்லெட்டிக்குடனான போட்டியில் 6-0 என அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. போட்டியின் ஆரம்ப நிமிடத்தில் வீகானின் ரொலடெகா அடித்த ப்றீ கிக் மயிரிழையில் தவறியது. 33வது நிமிடத்தில் செல்சீயின் ப்ராங் லாம்பார்ட் பாஸ் செய்த பந்தை புளோரன்ட் மலூடா கோலாக்கினார். 2வது பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிக்கலஸ் அனெல்கா கோலடித்து கோல் எண்ணிக்கையை 2-0 என உயர்த்தினார். 51வது நிமடத்தில் மலூடா கோலை நோக்கி அடித்த பந்தை ட்ரொக்பா தலையால் முட்ட அதை கோல் கம்பத்துக்கு அருகே இருந்த அனெல்கா முட்டி கோல் போட்டார்.

70வது நிமிடத்தில் பதில் வீரராக களமிறக்கப்பட்ட செல்சீயின் காலூ அதிரடியாக விளையாடி 77வது, 89து நிமிடங்களில் கோல் போட்டு பிரீமியர் லீகில் செல்சீயின் பலத்தை வெளிப்படுத்தினார். 5வது கோல் போட்ட மறு நிமிடமே 6வது கோலும் போடப்பட்டது. ட்ரொக்பா நேர்த்தியாக பாஸ் செய்த பந்தை பெரெயிரா லாவகமாக காலால் பின்னால் தட்ட அதைப்பெற்ற இன்னொரு பதில் வீரரான பெனாயுன் கோல் போட்டார்.

No comments:

Post a Comment