
இந்த முன்னிலையை தவறவிடக்கூடாது என்ற திடத்துடனேயே ரோமா அணியினர் விளையாடினாலும் இன்டர் மிலானின் கோரன் பன்தேவ் களத்தடுப்புப் பிழைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கோல் போட்டார்.இதனால் இடைவேளையின் போது இரு அணிகளும் 1-1 என சமநிலையிலிருந்தன. எனினும் கமரூன் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இன்டரின் சாமுவேல் ஈட்டூ ரோமா கோல் காப்பாளர் பொக்டன் லோபொன்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் 70வது, 80வது நிமிடங்களில் கோல் போட்டு இன்டர்மிலானின் வெற்றியை உறுதி செய்தார்.
No comments:
Post a Comment