Saturday, August 28, 2010

ஸ்லடான் போனார், மஸிரானோ வந்தார்!!

பார்சிலோனா அணியில் பல மாற்றங்கள் நேற்று ஏற்பட்டன. முதலாவதாக நீண்டகாலமாக பேச்சுவார்த்தையிலிருந்த ஸ்லடான் விவகாரம் முடிவுக்கு வந்தது. ஸ்லடான் இப்ராஹிமூவிக் நேற்று ஏ.சி மிலானுக்கு 24 மில்லியன் யூரோவுக்கு விற்கப்பட்டார். (ஆனால் சென்ற வருடம் பார்சிலோனா இவரை வாங்கும் போது இன்டரிடமிருந்து 66 மில்லியன் யூரோவுக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.) ஸ்லடான் ஏ.சி மிலான் அணியில் 4 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

அதேவேளை லிவர்பூலின் ஜேவியர் மஸிரானோ பார்சிலோனா அணியால் 21 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியனல் மெஸி, "மஸிரானோ இங்கு வருவது குறித்து எனக்கு மிக மகிழ்ச்சி. மஸிரானோ ஒரு சிறந்த மத்தியகள வீரர். சக நாட்டவருடன் சேர்ந்து விளையாடும் அனுபவம் எப்போதும் அருமையாகவே இருக்கும்." என கூறினார்

No comments:

Post a Comment