Saturday, August 28, 2010

மான்செஸ்டர் யுனைட்டட், ஆர்சனல், செல்சீ வெற்றி !!!

இங்கிலிஷ் பிரீமியர் லீகில் நேற்று நடந்த போட்டிகளில் முக்கிய கழக அணிகளான மான்செஸ்டர் யுனைட்டட், ஆர்சனல், செல்சீ என்பன வெற்றியீட்டியுள்ளன. முதலாவதாக நடந்த ஆர்சனல்-பிளாக்பர்ன் போட்டியில் ஆர்சனலின் தியோ வால்காட் 19வது நிமிடத்திலும், பிளாக்பர்னின் டியஃப் 26வது நிமிடத்திலும் கோல்களையடித்து கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினர். எனினும் ஆர்சனலின் அர்ஷாவின் 51வது நிமிடத்தில் கோலடிக்க அவ்வணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது.


பின்பு நடந்த செல்சீ ஸ்டோக் சிட்டி போட்டியில் செல்சீயின் புளோரன்ட் மலூடா 31வது நிமிடத்தில் கோலடித்தார். பின்பு 76வது நிமிடத்தில் அதே அணியின் டிடியர் டிரொக்பா பெனால்டி மூலம் கோலடிக்க செல்சீ 2-0 என வெற்றி பெற்றது. இப்போட்டித் தொடரின் 3வது வாரம் தொடங்கியும் இன்னும் செல்சீக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கற்போதைய அளவில் அதிக கோலடித்தோர் பட்டியலில் ஆர்சனலின் வால்கட்டும், செல்சீயின் மலூடாவும் தலா 4 கோலடித்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். 2வது இடத்தில் செல்சீயின் டிரொக்பா 3 கோலும், 1 பெனால்டி கோலும் அடித்துள்ளார்.


இதேவேளை மான்செஸ்டர் யுனைட்டட், வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் மான்செஸ்டர் யுனைட்டட் 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளது. அவ்வணியின் வேயளன் ரூனி 33வது நிமிடத்தில் பெனால்டி கோலடித்தும்(வெஸ்ட் ஹாமின் ஸ்பெக்டர் செய்த ஃபவுலால் பெறப்பட்டது), நானி, பெர்படோவ் ஆகியோர் முறையே 49வது, 68வது நிமிடங்களில் கோலடித்தும் அவ்வணியின் வெற்றிக்கு உதவினர்.

நேற்று நடந்த ஏனைய போட்டிகள்-

வீகான் அத்லெட்டிக் 1 - 0 டொட்டன்ஹாம்
வுல்வ்ஸ் 1 - 1 நியுகாஸ்டல்
பிளாக்பூல் 2 - 2 வுல்ஹாம்

No comments:

Post a Comment