ரொனால்டினோ, சில்வா இருவரும் ஏ.சி மிலானில் தொடர்ந்து விளையாடுவார்கள் என அந்த அணியின் தலைவர் புர்லுஸ்கானி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வீரர் பெக்கம், ரொனால்டினோவை கலக்சிக்கு வருமாறு விடுத்த அழைப்பையடுத்து ஏ.சி மிலான் அணித் தலைவர் ரொனால்டினோவுடன் புதிய ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவ்வொப்பந்தத்திற்கு ரொனால்டினோ சம்மதித்து விளையாட ஒப்புக் கொண்டுள்ளார். இதே போல் அவ்வணியின் பிறேசில் வீரரான தியாகோ சில்வாவும் வேறு அணிக்கு மாற்றப்பட மாட்டார் எனக் கூறப்படுகின்றது.
இன்னொரு புறம் ரியல் மட்ரிட்டால் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஜெரார்டுக்கு விடுக்கப்பட்ட மறைமுக அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரித்த அவர்,
“நான் இப்போது லிவர்பூலில் இருந்து மாறுவதாக இல்லை. எனது நண்பரான ஜோ கோலின் வருகை எங்களுக்கு உற்சாகமளிப்பதாக உள்ளது.. இந்த சீசனில் லிவர் பூலை பிறீமியர் லீக் சம்பியனாக்குவதே என் கனவு” எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment