02.07.10 நடந்த கால்பந்தாட்டப் போட்டிகள் விறுவிறுப்புக்குப் பஞ்சம் அற்றவையாக இருந்ததோடு அனேகருக்கு அதிர்ச்சி தருவனவாகவும் அமைந்தன. 1ம் நிலை அணியான பிறேசிலும், காலிறுதிக்குத் தகுதி பெற்ற ஒரே ஆபிரிக்க நாடான கானாவும் வெளியேற, நெதர்லாந்து, உருகுவே என்பன அரையிறுதிக்கு முன்னேறின.
முதலாவதாக நடைபெற்ற பிறேசில்- நெதர்லாந்து போட்டியில் நெதர்லாந்து 2-1 என வெற்றியீட்டியது. போட்டியின் தொடக்கத்தில் பிறேசில் அணியே ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பிறேசிலின் ரொபின்ஹோ போட்ட கோல் ஓஃப் சைட் ஆனதால் நிராகரிக்கப்பட்டது. எனினும் சுதாரித்துக் கொண்ட அவர் 10வது நிமிடத்தில் கோலொன்றைப் போட்டு பிறேசிலை முன்னிலையில் இருத்தினார். போட்டியின் 2வது பாதியில் கோலை சமப்படுத்த நெதர்லாந்து வீரர்கள் விடாது முயற்சித்தனர். அதன் பலனாக 53வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெஸ்லி ஸ்டெர் அடித்த ப்றீ கிக் பிறேசிலின் பிலிபே மெலோவின் தலையை உரசிச் சென்று சேம்சைட் கோலானது.
மற்றைய போட்டியான உருகுவே கானா போட்டியில் கானா வீரர் முன்டாரி 45வது நிமிடத்தில் கோலொன்றைப் போட்டார். அதை உருகுவேயின் போர்லான் 55வது நிமிடத்தில் கோல்போட்டு சமப்படுத்தினார். தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல்போட முயற்சித்தனர். போட்டி இறுதியை நெருங்கிக் கொண்டிருந்த போது கானாவின் அடியாஹ் கோலை நோக்கி அடித்த பந்தை உருகுவேயின் சுவாரெஸ் கையால் தடுக்க சிக்கல் எழுந்தது.
இதனால் சுவாரெஸ் மஞ்சள் அட்டை காட்டப்பட்டதோடு கானாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பெனால்டியை கியான் உதைக்க அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. போட்டி முடிவுக்கு வராமையால் பெனால்டி முறை அமுல்படுத்தப் பட்டது. அம்முறையில் உருகுவே அணி 4-2 என கோலடித்து வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment