06.07.10 நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் உருகுவேயை 3-2 என தோற்கடித்த நெதர்லாந்து முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அப் ஆபாட்டியில் நெதர்லாந்து ஆரம்பம் தொடக்கமே ஆவேசமாக ஆடி வந்தது. அவ்வணியின் தலைவர் வான் ப்ரொங்ஹேர்ஸ்ட் 18வது நிமிடத்தில் கிட்டத்தட்ட 30 அடி தொலைவிலிருந்து கோலொன்றைப் போட்டு அசத்தினார். தொடர்ந்து வந்த உருகுவே அணித் தலைவர் டியாகோ போர்லான் 41வது நிமிடத்தில் 25 அடி தொலையிலிருந்து கோலைப் போட்டு தானும் சளைத்தவரல்ல என நிரூபித்தார். இக் கோல் இப் போட்டித் தொடரில் அவரது 4வது கோலாகும். இதனால் இரு அணிகளும் இடைவேளையின் போது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையிலிருந்தன.
பின்னர் நெதர்லாந்து சார்பாக வெஸ்லி ஸ்னைடர் 70வது நிமிடத்திலும், அர்ஜான் ரொபர்ன் 73வது நிமிடத்திலும் கோல்களைப் போட்டு அணியை ஸ்திரமான நிலைக்கு இட்டுச்சென்றனர். பிற்பாதியின் மேலதிக நிமிடங்களின் போது உருகுவே அணி வீரர் பெரெயிரா ஒரு கோலைப் போட, முடிவில் நெதர்லாந்து 3-2 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியது.
No comments:
Post a Comment