உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் முடிவு பெற்று விட்டன. ஸ்பெயின் அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நாடு திரும்பியுள்ளது. அப் போட்டித் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வில்லா, முல்லர், இனியெஸ்டா போன்றோர் அனோரது பாராட்டைப் பெற்றுள்ளனர். எனினும் போட்டி தொடங்க முதலே ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வீரர்கள் சோபிக்கத் தவறி ரசிகர்களின் கோபத்துக்கு உள்ளாகியுள்ளனர். உண்மையைச் சொல்லப் போனால் இவர்கள் சோபிக்காமைக்கு காரணமே ரசிகர்கள் இவர்கள் மீது வைத்திருந்த மிதமிஞ்சிய எதிர்பார்ப்புத்தான். அவ்வாறான ஒரு வீரர்களைத் திருப்பி பார்ப்போம். –
1. லியோனல் மெஸி
ஆர்ஜென்டீனாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், உலகின் முதல் நிலை வீரராகவுமுள்ள இவரைப் பற்றி நன்கறிந்தவர்களுக்கு இப் போட்டித் தொடரில் அவரது ஆற்றல் குறைந்தது போலவே தென்படாது. எனினும் 2009 லீக் இல் பார்சிலோனா அணி சார்பாக 42 கோல் போட்ட இவருக்கு இப் போட்டித் தொடரில் ஒரு கோலேனும் போட முடியாது போனது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது. எதிரணி வீரர்கள் இவரையே சுற்றி வளைத்துக் கொண்டிருந்தமையால் இவருக்கு கோல் போடும் வாய்ப்பு குறைவாகவே கிடைத்தது. எவ்வாறாயினும் இவர் கொடுத்த பாஸ்களாலேயே டெவேஸ், ஹிக்வாயின் போன்றோர் கோலடிக்க முடிந்தமையும் மறுக்க முடியாதது.
2. கிறிஸ்டியானோ ரொனால்டோ
ரசிகர்களால் CR7 என செல்லமாக அழைக்கப்படும் இவர் எதிரணியினரைத் திக்குமுக்காடச் செய்யும் ஆட்டத்திற்குப் பெயர் போனவர். இவறது திறமை காரணமாகவே ரியல் மாட்ரிட் இவரை 80 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியது. அவ்வணி சார்பாக முதல் சீசனில் 35 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் போட்டு சாதனை படைத்தார். 2006 போர்த்துக்கல் வரை முன்னேற முக்கியமான காரணமே இவர்தான் என அறியாத சிலர் எனினும் போர்த்துக்கல் அணிக்காக இவரது திறமை வெளிக் கொண்டு வரப்படுவதில்லை எனக் குற்றஞ் சாட்டுகின்றனர். இம் முறை அவ்வணியின் தலைமைப் பொறுப்பு இவரிடம் கையளிக்கப்பட்டிருந்ததால் இவரால் முன்னர் போல வேகமாகவும், அசால்ட்டாகவும் விளையாட முடியவில்லை அதனால் இம் முறை ஒரே ஒரு கோலையே போட்டிருந்தார்.
3. வேயன் ருனி
4. பெர்னான்டோ டொரஸ்
5. ககா
No comments:
Post a Comment